பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் தர்ஷா குப்தா

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி ஆரம்பமானதில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தாலும் சற்று டல்லடிக்கத்தான் செய்கிறது.

மூன்றாவது வாரம் கடந்துள்ள நிலையில் ரவீந்தர் முதல் வாரத்திலும் அர்னவ் இரண்டாவது வாரத்திலும் எவிக்ட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.

இன்றோரு 20 நாட்களாகியுள்ள நிலையில் இன்று குறைந்த வாக்குகள் பெற்று எவிக்ட் செய்யப்பட்டவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு மாசத்துக்கு தேவையான ஆடைகளை எடுத்து வந்துள்ளேன் ஒரு மாதமாவது இருப்பேன் என்று தர்ஷா ஒரு போட்டியின் போது கூறியிருந்தார்.

அதற்கு அந்த ஆசை நிறைவேறாமல் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்.

இந்நிலையில் தர்ஷா குப்தா 20 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்காக ஒரு நாள் சம்பளமாக 25 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டு சுமார் 5 லட்சம் சம்பளமாக வாங்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.