34 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட அஞ்சல் சேவை!

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக 1990 ஆம் ஆண்டளவில் காங்கேசன்துறை பகுதியில் இருந்து மக்கள் வெளியேறியபோது, அங்கு இயங்கி வந்த அஞ்சல் அலுவலகமும் இடம்மாற்றம் செய்யப்பட்டது.

அதிஉயர் பாதுகாப்பு வலயமாக காங்கேசன்துறை இருப்பதால் தற்காலிகமாக மாவிட்டபுரம் பகுதியில் குறித்த அஞ்சல் அலுவகலகம் இயங்கி வந்த நிலையில், தற்போது மீண்டும் காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகம் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, மீண்டும் அஞ்சல் அலுவலகம் இயங்க கட்டட வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால் அதற்கு பாரிய நிதி செலவு காணப்படுவதன் காரணமாக தனியார் கட்டடம் ஒன்றினை வாடகைக்கு எடுத்து குறித்த அஞ்சல் அலுவலகம் தனது சேவையை தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 34 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் காங்கேசன்துறையில் அஞ்சல் அலுவலகம் இயங்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.