அம்பாறை நிந்தவூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய இராட்சத சுறா!

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது.

கடலுக்குச் சென்ற மீனவர்கள் இன்று (22) காலை இதனை அவதானித்துள்ளனர்

இந்நிலையில் கடற்கரையில் ஒதுங்கிய குறித்த இராட்சத சுறா மீனை அப்பகுதி மீனவர்கள் ஒன்றிணைந்து மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.