கௌரி யோகத்தால் அதிஷ்டம் பெறப்போகும் இராசிக்காரர்கள்

ஜோதிடத்தில், கௌரி யோகம் மிகவும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சந்திரனும் வியாழனும் எந்த ராசியில் சேர்ந்தாலும் இந்த யோகம் உருவாகும்.

கௌரி யோகத்தால் ஐந்து ராசியினரின் வாழ்வில் அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது. அன்னை கௌரியின் அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் அந்த ஐந்து ராசியினர்கள் யார் என நாம் இங்கு பார்போம்.

ரிஷப ராசிக்காரர்கள்
நிலத்தை விற்க நினைப்பவர்கள் நிலத்தின் மூலமாக நல்ல லாபத்தை அடைவார்கள். கடினமான காலங்களில் நண்பர்கள் உற்ற துணையாக இருப்பார்கள். மனைவி மிகவும் ஆதரவாக இருப்பார். நிதி நிலை பலப்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி ராசிக்காரர்கள்
கன்னி ராசிக்காரர்களுக்கு இது மாற்றத்தைக் கொடுக்கும் காலமாக இருக்கும். நெருங்கிய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் மன அமைதி பெறுவார்கள். வீடு தொடர்பான முதலீடுகளால் லாபம் கிடைக்கும்.பிரபலமானவர்களின் சந்திப்பு புதிய திட்டங்களையும் யோசனைகளையும் அளிக்கும். அதே சமயம் வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டுவார்கள்.

விருச்சிக ராசிக்காரர்கள்
நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு அவர்களின் கடின உழைப்பால் வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதே சமயம் வெளி நாடுகளுடன் தொடர்புடைய தொழில் செய்பவர்களும் ஆதாயமடைவார்கள். மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். கணவன் – மனைவி உறவு வலுவடையும். அலுவலகத்தில் சில நல்ல செய்திகளைப் பெறலாம்.

மகர ராசிக்காரர்கள்
மகர ராசிக்காரர்களுக்கு சுபகாலம் தொடங்கும். இந்த நேரம் நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். நிலுவையில் உள்ள பணத்தைப் பெறுவதன் மூலம் நிதி நிலை மேம்படும். வீட்டில் சில மாற்றங்கள் உங்களை உணர்ச்சிவசப்பட வைக்கலாம். உணர்வுகளை அன்புக்குரியவர்களிடம் வெளிப்படுத்தலாம். இந்த நேரம் மகர ராசியினருக்கு மிகவும் சாதகமானது. ஏனென்றால் அதிர்ஷ்டம் மகர ராசியின் பக்கத்தில் இருக்கும். சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பதன் மூலம் பெரும் பலனை அடைவார்கள். இருப்பினும், இந்த நாள் மகர ராசியினரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு சற்று சவாலாக இருக்கலாம்.

கும்ப ராசிக்காரர்கள்
கும்ப ராசிக்காரர்களைப் பற்றிப் பேசினால், கும்பம் ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் தீரும். அதிக பணம் செலவழிப்பார்கள். ஆனால் பணத்திற்கு பஞ்சம் இருக்காது.