HPV தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சின் அறிவிப்பு!

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் செலுத்தப்படும் HPV தடுப்பூசி செலுத்திய பின் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பாடசாலை மாணவிகள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் அந்த மாணவிகளுக்கு வயிற்று வலி, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், சுகயீனமுற்ற மாணவர்களுக்கு உரிய வைத்திய சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் அவர்கள் குணமடைந்துள்ளனர்.

தடுப்பூசி செலுத்தப்படும் போது மாணவிகளுக்கு ஏற்படும் அச்சம் காரணமாகவே இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதாக இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.