யாழில் சீரற்ற காலநிலையால் தூக்கி வீசப்பட்ட கூரைகள்!

யாழ்ப்பாணத்தில் நிலவும் மழையுடன் கூடிய காற்று காரணமாக இன்றையதினம் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

சங்கானைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு ஜே/162 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடு ஒன்றின் கூரைகள் தூக்கி வீசப்பட்ட நிலையில் வீட்டுக்குள் வெள்ளமும் உட்புகுந்துள்ளது.

இந்த நிலையில் கொடுத்த வீட்டில் வசித்தவர்கள் வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்துள்ளதாக உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.