எல்பிட்டிய தபால் மூல வாக்களிப்பு நிறைவு!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தபால் மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி இன்று (18) ஆகும்.

இதுவரை தபால் மூல வாக்குகளை அளிக்காத வாக்காளர்களுக்கு இன்று அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்படி, தாம் பணிபுரியும் இடத்தில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அனைத்து தபால் வாக்காளர்களும் தமது நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்