வெலிப்பன்ன இடமாறல் மீண்டும் திறப்பு

களுத்துறை மாவட்டத்தில் பெய்துவரும் பலத்த மழை தணிந்ததையடுத்து, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன இடமாறல் இன்று (12) காலை 7.00 மணிக்கு போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வெலிபன்ன இடமாறல்  நேற்று காலை வெள்ளத்தில் மூழ்கியதால் அந்த இடம் மூடப்பட்டிருந்தது.