அரச வாகனங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு!

அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் திருட்டு அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் தகவல் தெரிவிக்க புதிய துரித அழைப்பு இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபரினால் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் திருட்டு அல்லது துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அவதானிக்கும் பொது மக்கள் 1997 என்ற துரித இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.