2025 இற்குள் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகபோகும் ராசிக்கார்கள்

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது.

அதன் பிரகாரம் அக்டோபர் 9ஆம் திகதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 4ஆம் திகதி வரையில் ரிஷப ராசியில் இருப்பார்.

ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைகிறார். குரு பெயர்ச்சி மற்றும் அதன் வக்ர பெயர்ச்சி பொதுவாகவே அனைத்து ராசியினருக்கும் குறிப்பிடதக்க சாதக மற்றும் பாதக மாற்றங்களை கொடுக்கும்.

ஆனால் 2025 ஆம் ஆண்டுக்குள் சிம்ம ராசியினரின் வாழ்வில் பாரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என ஜோதிட வல்லுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

அந்த வகையில் சிம்ம ராசியினர் எந்த விடயங்களில் சாதக பலங்களையும் ராஜ யோகத்தையும் பெறப்போகின்றார்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.

அசுர வளர்ச்சி காணும் சிம்மம்
இந்த ஆண்டின் இறுதி வரையில் சிம்ம ராசியினர் பணத்தை எந்த முறையிலும் முதலீடு செய்ய கூடாது.

பணத்தை சேமிப்பதும், சுப செலவுகளை மேற்கொள்வதும் இவர்களுக்கு ராஜயோகத்தை கொடுக்கும்.

திருமண உறவில் சில சில பிரச்சினைகள் வந்து நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

சிம்ம ராசியினருக்கு பண விடயத்தில் அமோக வெற்றி கிடைக்கப்போகின்றது. நீண்ட நாள் வந்து சேராமல் இருந்த கடன் தொகை மொத்தமாக வந்து சேரும்.

தொழில் ரீதியிலும் வியாபாரத்திலும் பல வழிகளில் இருந்தும் வருமானம் பெருகுவதுடன், தொழிலை விரிவுப்படுத்தும் வாய்ப்பு அமையும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் சிம்ம ராசியினருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.

ஆரோக்கிய விடயத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். உடல் உபாதைகள் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

ஆண்டின் இறுதிக்குள் இவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பெரிய தொகை பணம் கைக்கு வரும் வாய்ப்பு அமையும்.

லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு. வியாபாரத்தின் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் தானாவே தேடிவரும்.