மாணிக்க கங்கையில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு!

மாணிக்க கங்கையிலிருந்து முதியவர் ஒருவர் நேற்று (08) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.

பெலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சடலமாக மீட்கப்பட்ட முதியவர் கடந்த 7 ஆம் திகதி மாணிக்க கங்கைக்கு நீராடச் செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

இந்நிலையில், முதியவர் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, மாணிக்க கங்கைக்கு அருகில் வைத்து முதியவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.