அனுரவுடன் இணையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில், தேசிய மக்கள் சக்திக்குத் தங்களது கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் வகையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனநாயக இடதுசாரி முன்னணி போட்டியிடவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முயன்ற போதிலும் அது சாத்தியப்படவில்லை. அவர்களது கொள்கை ரீதியான பிரச்சினை காரணமாக அந்த முயற்சிகள் கைகூடவில்லை.

பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம். தனித்துப் போட்டியிட்டாலும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அளிப்போம்.

எங்களுக்கு அளிக்கும் வாக்குகளைத் தேசிய மக்கள் சக்திக்கு அளிக்கப்படும் வாக்குகளாக ஆதரவாளர்கள் கருத வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.