பதவி விலகிய மாவை!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவி உள்ளிட்ட பொறுப்புக்களில் இருந்து விலகுவதாக மாவை சேனாதிராஜா கட்சியினருக்கு அறிவித்துள்ளார்.

கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிவஞானம் சிறீதரனுக்கு கடிதம் அனுப்பியுள்ள மாவை சேனாதிராஜா தலைமை பொறுப்பை ஏற்குமாறும் கோரியுள்ளார்.

கடிதத்தின் பிரதி கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது.