பிரித்தானியாவில் திருமணமான யாழ் இளைஞன் மரணம்!

பிரித்தானியாவில் திருமணம் செய்து ஒரு வருடத்தில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

கடந்த வருடம் நடுப்பகுதியில் திருமணம் செய்த நிலையில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளஞர் உயிரிழந்துள்ளார் .

சம்பவத்தில் யாழ்ப்பாணம் அல்வாய் பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே உயிரிழந்தவர் ஆவார். இந்நிலையில் திருமணமான ஒரே வருடத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.