பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் சசிகலா!

நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

இன்று (07) யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் இல்லத்தில் வேட்புமனுவில் கையொப்பமிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்