தங்கத்தின் விலை அதிகரிப்பு!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விலை நிலவரங்களுக்கு அமைய, இன்றையதினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 208,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 192,500 ரூபாவாக காணப்படுகின்றது.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 208,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 192,000 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

இதேவ‍ேளை, சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,643.43 அமெரிக்க டொலர்களாக உள்ளமை குறிப்பிடத்கத்கது.