கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை!

கொழும்பில் (Colombo) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு – வாழைத்தோட்டம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட டெக்னிகல் சந்தி பகுதியில் இன்று (07) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் தாக்குதலுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் இருந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையினர் விசாரணை
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பெண் 32 வயதுடையவர் எனவும் அவரது நிரந்தர வதிவிட முகவரி இதுவரை அறியமுடியவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவருக்கும் மற்றுமொருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.