பாலஸ்தீனில் ஏதிலிகள் முகாம் உணவகம் ஒன்றின் மீது வான்வெளி தாக்குதல்!

பாலஸ்தீனில் ஏதிலிகள் முகாம் உணவகம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் ஹமாஸ் அமைப்பைத் தலைமை தாங்கிய ஷகி யாஷிர் அப்துல் ராஷிக்கே (Zahi Yaser Abd al-Razeq) இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, தெற்கு பெய்ரூட்டில் உள்ள பொதுமக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் அறிவுறுத்தியுள்ளது. அங்கு வான்வழித் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் இஸ்ரேல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.