ரயிலுடன் மோதி ஒருவர் பலி!

அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டிமுல்ல ரயில் நிலையத்திற்கும் அளுத்கம ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த ரயிலில் மோதிய குறித்த நபர் மரணித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர், பேருவளை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

சடலம் நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்