நண்பனின் காதலியை சந்திக்க சென்ற மாணவன் கொலை!

நண்பனின் காதலியை சந்திப்பதற்காக நண்பனுடன் சென்ற மாணவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை கவுடுபெல்ல மா/ கலைமகள் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவரே இவ்வாரு நண்பனின் காதலியின் தந்தையின் குழுவினரால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் மாத்தளை உல்பத்தமடவள, நாளந்த தோட்டத்தை சேர்ந்த எம் யுகேஸ் எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.

கொலையுடன் சம்பந்த பட்ட நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை ர் மேற்கொண்டு வருகின்றனர்.