அம்பாறையில் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைது!

அம்பாறை – இறக்காமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை(27) மாலை வீதி உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சான்றுப்பொருட்கள் மீட்கப்பட்டு இறக்காமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கைது செய்யப்பட்டவர் வரப்பத்தான்சேனை 02 வண்டிக்காரன் வீதி பகுதியை சேர்ந்த 43 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை என்பதுடன் 5 கிராம் 650 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சந்தேக நபர் போதைப்பொருள் நுகர்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த கைது நடவடிக்கையானது விசேட அதிரடிப்படை அதிகாரி கட்டளை அதிகாரி பிரதிப் காவல்துறை மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.