அதிகாலை தீ விபத்து உறங்கிக் கொண்டிருந்த நபர் உயிரிழப்பு

புத்தளம், மாரவில பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நபரே உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மாரவில, தும்மோதர, சுஹதாவத்த வீதி பகுதியை சேர்ந்த 44 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என பொலிார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை, கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.