யாழில் பாம்பு தீண்டியதில் இளம் குடும்பஸ்தர் மரணம்!

யாழ் சாவகச்சேரி பகுதியில் பாம்பு தீண்டி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருணம் செய்து இரண்டு வருடங்களில் இளம் குடும்பஸ்தர் நேற்றிரவு பாம்பு தீண்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணபுரிந்து வரும் குறித்த இளம் குடும்பஸ்தர் நேற்றிரவு வியாழக்கிழமை மாலை 6:00 மணியளவில் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார் .

யாழ் சாவகச்சேரி நுணாவில் வைரவர் கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தையின் தந்தையான வினோத் வயது 29 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் .

சடலம் சாவகச்சேரி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது இச் சம்பலம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆழ்ந்த இரங்கல்கள்