புதிய மாகாண ஆளுநர்கள் நியமனம் 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று புதிய மாகாண ஆளுநர்களை நியமிக்கவுள்ளார்.

இன்று மாலை இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஜனாதிபதி இன்று இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றையும் ஆற்றவுள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றும் விசேட உரையை இரவு 7.30 மணி முதல் டி.வி தெரண, அத தெரண 24 செய்தி சேவை, எப்.எம் தெரண, அத தெரண சமூக ஊடக வலையமைப்புக்கள் ஊடாக ஒளிபரப்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.