நாட்டைவிட்டு வெளியேறிய கோட்டபாய

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேபாளத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் அவர் இன்று நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார்.நேபாளத்தில் உள்ள பல்வேறு பௌத்த தலங்களுக்கு அவர் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பரத்பூருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தூதரகத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.குறித்த பயணம் கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட பயணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள சவுத்ரி குழுமத்துடன் ராஜபக்ஷவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், சவுத்ரி குழுமம் விடுத்த அழைப்பின் பேரிலேயே நேபாளத்துக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.