பிரதமர் தினேஸ் குணவர்தன இராஜினாமா செய்தார்

பிரதமர் தினேஸ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை சோசலிச குடியரசின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்பின் 47 (2) ஆவது சரத்தின் பிரகாரம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக தினேஸ் குணவர்தன குறிப்பிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.