தேர்தலின் இறுதி முடிவுகள் குறித்து தேர்தல் ஆணைகுழு விடுத்துள்ள கோரிக்கை!

2024 ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியான பின்னர் நாட்டு மக்கள் அமைதியாக முறையில் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், நடந்து முடிந்த தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதி தேர்தலில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் இது திருப்திகரமாகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.