தேர்தல் கடமையின் போது மது போதையில் இருந்த வாகன சாரதி கைது!

கேகாலை மாவட்டத்தின் தெரணியகலை பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு பணியாளர்களை அழைத்துச்சென்ற வேன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் மற்றும் பணியாளர்களுடன் தெரணியகலை பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு பயணித்த வேன் சாரதி கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக தெரிவித்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது, வாக்குச்சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் மற்றும் பணியாளர்களை வேறு வாகனத்தில் கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.