யாழ். மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள்

  இலங்கையில் நாளை சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடெங்கும் மிகத் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள 511 வாக்குச் சாவடிகளுக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து வாக்குப் பெட்டிகள் இன்றைய தினம் (20) எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனயாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்த வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.