யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட தம்பதி கைது!

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சங்கானை வைத்தியசாலை வீதியில், துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் அறுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்றனர்.

பொலிஸ் விசாரணையில் மேலும் பல தகவல்
இதன்போது கொள்ளையிட்ட தம்பதியை மடக்கி பிடித்த ஊரவர்கள் , சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை கணவன் – மனைவி இருவரும் சுன்னாகம் பகுதியிலும் கடந்த வாரம் நபர் ஒருவருடைய சங்கிலியை அறுத்தமை தெரியவந்தது.

அதோடு அதனை யாழ். நகர் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் அடகு வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்னர்.

இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.