சூட்கேஸில் மீட்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம்

சென்னையில் (Chennai) வீதியில் வீசப்பட்ட சூட்கேஸில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சடலமானது இன்று (18) சென்னையை அடுத்த துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வீதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இரத்த கரைகளுடன் சூட்கேஸ் ஒன்று கிடந்ததுள்ளது.இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் துரைப்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சூட்கேஸை திறந்து பார்த்த நிலையில் அதில் பெண்ணொருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.இதன் பின் குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டு காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து, நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் 25 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.