கொரியர் வாகனத்திலிருந்து வெளிநாட்டுப் பொதிகள் திருட்டு- இருவர் கைது!

கொரியர் சேவைக்குரிய நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றிலிருந்து வெளிநாட்டு பொருட்களை திருடிய 2 சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியை சேர்ந்த 27 மற்றும் 47 வயதுடைய சந்தேக நபர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.