மரம் முறிந்து விழுந்ததில் பலியான பெண்!

வெல்லவாய விறகு வெட்டுவதற்காக சென்ற பெண் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (16) – ஊவா குடா ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோரஆர வாவி அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் தோரஆர – எதிலிவெவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , ஊவா குடா ஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.