மன்னாரில் மாயமான சோதனை சாவடிகள்

மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் மற்றும் சோதனை சாவடிகள் இன்று(17) காலை அவசர அவசரமாக அகற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை ஒட்டி இன்றையதினம்(17) பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னார் மாவட்டத்திற்கு வருகைதரவுள்ளார்.இந்த நிலையில் பிரதான பாலத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் மற்றும் சோதனை சாவடிகள் அடையாளம் தெரியாத வகையில் வீதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மன்னார் வருகையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதனால் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக சோதனை சாவடி அகற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.ருப்பினும் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டு ஒரு வார காலத்தின் பின் மீண்டும் சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டிருந்தது.