கொழும்பில் மர்மான முறையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!

கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரு விபசார விடுதிகளில் இருந்து 8 பெண்களை கைது செய்திருப்பதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இச் சம்பவம் கொழும்பு கிரிபத்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த மசாஜ் நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்பின் போது, ஒரு விபசார விடுதியிலிருந்து 05 பெண்கள் மற்றொரு விடுதியிலிருந்து 03 பெண்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அம்பாறை, பொலன்னறுவை, தெஹியத்தகண்டிய, பதவிய, மட்டக்குளி மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 முதல் 45 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.