கனடாவில் மனைவி மீது சந்தேகம் மனைவியை தாக்கிய கணவன்!

கனடாவில் உள்ள ஒன்ராறியோ மாகாணத்தில் மனைவியை அடித்து தலையில் காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சியைச் சேர்ந்த 43 வயதான குடும்பஸ்தர் ஒருவரே கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவே இவ்வாறு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

ஒன்ராரியோவில் உள்ள கோவில் ஒன்றின் குருக்களான இந்தியாவைச் சேர்ந்த ஒருவருடன் மனைவி கள்ளத் தொடர்பில் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகம் சில நாட்களாக குறித்த குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்துள்ளது.

இதன் பின்னரே தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

குறித்த ஆலயத்தின் ஐயர் தங்கியிருந்த இடத்திற்கு மனைவி காரில் சென்று வீடு திரும்பும் போது காரை வழி மறித்து கணவன் மனைவியைக் கடுமையாகத் தாக்கியதாகவும் காரைச் சேதப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்த ஒன்றாரியோ பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.