ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கான ஆதரவு அதிகரிப்பு!

வடக்கு கிழக்கில் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரிக்கும் அரசியல் தரப்பினர் தமிழ் மக்களை திசை திருப்பும் செயற்பாட்டில் ஈடுப்பட்டுள்ளதாக அகில இலங்கை (Sri lanka) மீனவர் மக்கள் தொழிற்சங்க இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமிழ் பொது வேட்பாளர் ஊடாக தீர்ப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை யாழில் (Jaffan) நேற்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தமிழ் பொதுவேட்பாளரை கண்டு இலங்கை அரசாங்கமும் ஒரு சில தமிழ் கட்சிகளும் அஞ்சுகின்றன.

“தமிழ் பொது வேட்பாளரை மற்றையவர்கள் விமர்சிப்பதை விட தமிழ் மக்களால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட அரசியல்வாதிகளே விமர்சிக்கிறார்கள்.

அவர்களிடம் நாங்கள் கேட்பது, இம்முறை தேர்தலில் நீங்கள் எல்லோரும் அனைத்து மக்களையும் பொதுவேட்பாளருக்கு ஆதரிக்குமாறு செய்ய வேண்டும்” என்றார்.