விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த ஜெயம் ரவி!

விவாகரத்து மனு கோரி நடிகர் ஜெயம் ரவி வழக்கு தாக்கல் செய்தாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி.

இவர் மோகன் ராஜா இயக்கியத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனிடையே கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்து சுமாராக 15 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்து வரும் ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதிகளுக்கு அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

ஆர்த்தி, தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் குடும்பமாக புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படியொரு நிலையில் ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி வருகின்றது.

இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று (செப். 9) ஜெயம் ரவி தன் மனைவியைப் பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை இவர்களின் பிரிவை உறுதிப்படுத்தியது. இதனை தொடர்ந்து , நடிகர் ஜெயம் ரவி மனைவி- ஆர்த்தியை விவாகரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாராம்.

இந்த வழக்கு எதிர்வரும் அக்டோபர் 10 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.