பாம்பு தீண்டியதில் பலியான பெண்!

பசறை தனியார் தேயிலை தோட்டமொன்றில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் 40 வயதுடைய கெரண்டிஎல்ல பசறை பகுதியை சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் (22) தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்ணை பாம்பொன்று கடித்து, ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று (23) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மரண பரிசோதனையின் அடிப்படையில், பாம்பின் விஷம் உடலில் பரவியமையே மரணத்துக்கான காரணம் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.