மாமியாரை கல்லால் தாக்கிய மருமகன்!

கேகாலையில் மனைவியின் தாயாரை கல்லால் தாக்கி படுகொலை செய்த மருமகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலபிடமட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெவங்கம பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

அதலவத்த, லெவங்கம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் பணத் தகராறு தொடர்பாக தனது மனைவி மற்றும் மனைவியின் தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் மனைவியின் தாயாரை கல்லால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், படுகாயமடைந்த பெண் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேலும் மனைவியும் மகளும் கூரிய ஆயுதத்தால் காயம்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கலபிடமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.