யாழில் முரண்பாட்டால் எரிக்கப்பட்ட சொத்துக்கள்

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தான் குளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால் பாரிய வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் நேற்று (13) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது, சேந்தான் குளம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 படகுகளுக்கு தீ மூட்டப்பட்டுள்ள நிலையில் சில வாடிகளும் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து, அப்பகுதி மக்களால் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.