அலி சப்ரி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்!

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வு சற்றுமுன்னர் (12.8.2025) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

பதவிப் பிரமாணம்
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவின் பதவி விலகியதை அடுத்து ஜனாதிபதியால் இந்த பதவிப் பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது.

நீதி சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஆகஸ்ட் 07 ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.