ஆனையிறவு விபத்து தொடர்பில் வெளியான செய்தி!

கிளிநொச்சி – ஆனையிறவு சோதனைச் சாவடிக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (09) காலை மோட்டார் சைக்கிளொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விசுவமடு ரெட்பாரா பகுதியில் இருந்து இருவர் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டர் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இராணுவத்தின் சோதனைச் சாவடியுடன் மோதி, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடனும் மோதியதில் குறித்து விபத்து ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் விசுவமடு ரெட்பாரா பகுதியைச் சேர்ந்த காந்தரூபன் கலையரசன் என்னும் 21 வயது உடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

மேலும் விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசராணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.