கடும் காற்றினால் பொன்னாலையில் பதிக்கப்பட்ட குடும்பங்கள்!

யாழ்ப்பாணம் – சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம், கல்விளான் பகுதியில் வீசிய கடும் காற்றால் வீட்டின் கூரையொன்று தூக்கி எறியப்பட்டதையடுத்து, மூன்று குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன.

இச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் அந்த வீட்டில் வசித்துவந்த நிலையில்,

இந்த அனர்த்தம் காரணமாக, அவர்கள் சுழிபுரம் திருவடிநிலை சைவத் தமிழ்க் கலவன் பாடசாலையில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அசம்பாவிதம் இடம்பெற்ற வீட்டிலிருந்த குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.