ஹமாஸ் படைகளின் புதிய தலைவரை மிரட்டும் இஸ்ரேல்!

காஸாவின் பின்லேடன் என பரவலாக அறியப்படும் யாஹ்யா சின்வார் ஹமாஸ் படைகளின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் கடும் மிரட்டல் விடுத்துள்ளது.

ஜூலை 31ஆம் திகதி தெஹ்ரானில் இருந்த ஹனியே மற்றும் அவரது பாதுகாவலர்கள் இரவோடு இரவாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, தங்கள் கொலைப்பட்டியலில் உள்ள அனைவரையும் பழி தீர்ப்போம் என்றே இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது.

11 பேர்கள் கொண்ட அந்த கொலைப் பட்டியலில் ஐவர் மட்டுமே எஞ்சியுள்ளனர். சின்வாரை பொறுத்தமட்டில், தனது இளமைக் காலத்தின் சரிபாதி நாட்களை இஸ்ரேல் சிறையில் கழித்தவர். அங்கிருந்து விடுதலையானதன் பின்னர், மிகக் கொடூரமாப தலைவராக உருவானார்.

தற்போது இஸ்ரேல் இராணுவத்தின் முதன்மையான இலக்காகவும் உள்ளார். யாஹ்யா சின்வார் பெரும்பாலும் நகரத்திற்கு அடியில் ஏதேனும் சுரங்கங்களில் ஒளிந்து கொண்டுள்ளார் என்றே நம்பப்படுகிறது.

காசா பிராந்தியத்தில் அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டாலும், ஹமாஸ் தலைவர்கள் உட்பட அதன் உறுப்பினர்கள் அனைவரையும் அழித்தொழிப்பதே தங்களின் இலக்கு என இஸ்ரேல் கூறி வருகிறது.

ஒக்டோபர் 7ஆம் திகதி தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 11 மாதங்களாக தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 40,000 தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காசா பகுதி மொத்தமாக சேதமடைந்துள்ளதோடு, சுமார் 2 மில்லியன் மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

ஹமாஸ் தலைவர்களின் செல்வாக்கு மிக்கவர்களில் சின்வாரும் ஒருவர். இதனால் ஹனியே படுகொலை விவகாரம் பூதாகரமாக வெடிக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.