ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதியானோர்!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க 1,71,40,354 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக கம்பகா மாவட்டம் 1881 129 ஆக உள்ளது. 306 081 வாக்காளர்களுடன் வன்னி மாவட்டத்தில் மிகக் குறைந்த வாக்காளர்கள் உள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் வாக்காளர்கள்
கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக சுமார் 13 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.மாவட்ட ரீதியாக வாக்காளர் விபரம் வருமாறு,

கொழும்பு 1,765,351, கம்பஹா 1,881,129, களுத்துறை 1,024,244, கண்டி 1,191,399, மாத்தளை 429,991, நுவரெலியா 605,292, காலி 903,163, மாத்தறை 686,175,அம்பாந்தோட்டை 520,940, யாழ்ப்பாணம் 593,187(யாழ்ப்பாணம் மாவட்டம் 492,280) (கிளிநொச்சி மாவட்டம் 100,907) வன்னி 306,081 வவுனியா மாவட்டம் 128,585(மன்னார் மாவட்டம் 90,607) (முல்லைத்தீவு மாவட்டம் 86,889)( மட்டக்களப்பு 449,686) திகாமடுல்ல 555,432, திருகோணமலை 315,925, குருநாகல் 1,417,226, புத்தளம் 663,673, அநுராதபுரம் 741,862,பொலன்னறுவை 351,302, பதுளை 705,772, மொணராகலை 399,166, இரத்தினபுரி 923.736, கேகாலை 709,622 மொத்தம் 17,140,354