ஒட்டாவா விபத்தில் இருவர் பலி!

ஒட்டாவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் கொள்ளப்பட்டுள்ளார்.

சுமார் 20 வயது மதிக்கத்தக்க இருவர் இவற்றில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒட்டாவாவின் 416ம் மற்றும் 417ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்களே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த வாகன விபத்து தொடர்பில் ஒன்றாறியோ மாகாண பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தில் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்த விட்டார் எனவும் படுகாயம் அடைந்த ஏனைய சைக்கிள் சாரதி வைத்தியசாலையில் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வேகமாக இந்த மோட்டார் சைக்கிள்கள் பயணித்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்தினை தொடர்ந்து 416 மற்றும் 417 இலக்க அதிவேக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.