கனடாவில் ஏழு வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்!

கனடாவில் காணாமல் போயிருந்த ஏழு வயது சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றாரியோ மாகாணம் லண்டன் தேம்ஸ் நதியில் இந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை குறித்த சிறுமி காணாமல் போயிருந்தார்.

லண்டன் பொலிஸாரும், தீயணைப்புப் படையினரும் கூட்டாக இணைந்து சிறுமியை தேடும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

7 வயதான என்னா பெய்லி என்ற சிறுமியை சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் தேடிவந்த நிலையில், சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹெலிகொப்டர்களும் இந்த தேடுதலின் போது பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்த சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.