மலையகத்தில் இருந்து மதகுருவால் யாழிற்கு அழைத்துவரப்பட்ட இளைஞன் மாயம்!

மலையகத்தில் இருந்து மதகுரு ஒருவரால் யாழிற்கு அழைத்துவரப்பட்ட இளைஞன் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் இராஜரட்ணம் சசிதரன் என்ற இளைஞனே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் குறித்த இளைஞன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 0779361354 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.