சஜித் பிரேமதாசவின் கூடங்கள் ரத்து!

சஜித் பிரேமதாச அம்பாறை மாவட்டத்தில், இன்று (29) கலந்து கொள்ள இருந்த எட்டு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

பின்தங்கிய பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு பாடசாலைகளுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் அறைக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகளே இவ்விதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாசவின் இணைப்பாளர் வி. வினோ காந்த் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் விதிமுறை
குறித்த நிகழ்வுகள், முன் கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளுக்கமைவாக இந் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன.

அதாவது தேர்தல் ஆணையகத்தினால் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பிற்பாடு இத்தகைய நிகழ்வை நடத்துவது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயலாகும் என்ற காரணத்தினால் இது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அம்பாறையில் இருந்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு சென்ற முறைப்பாட்டை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் நடைமுறை விதிகளுக்கு அமைவாக இந்த நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றார்.